முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனோபாலா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாக்கு சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து கழக அம்மா பேரவை செயலாளரும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாச்சிகுறிச்சி கிராமத்தில் தங்கி அதிமுக நிர்வாகிகளுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டுவருகிறார்.

இந்த நிலையில் நாச்சிகுறிச்சி கிராமத்தில் உள்ள ஜோதி ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அழைத்து வந்து தேர்தல் தலைமை அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில் அமர வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திரைப்பட இயக்குனரும் தலைமைக்கழக பேச்சாளருமான மனோபாலா அதிமுக சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், மணிகண்டம் ஒன்றியப் பெருந்தலைவர் முத்துக்கருப்பன், கழக பொதுக்குழு உறுப்பினர் சாத்தனூர் ராமலிங்கம், காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திரைப்பட இயக்குனர் மனோபாலா பேசியதாவது.
 
முதன்முதலாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் முதல் திரைப்பட் கலைஞர் நான்தான் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இதற்காக வாய்ப்பளித்த மக்களின் முதல்வர் அம்மாவிற்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் எனது கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான். இக்கட்சியை மக்கள் முதல்வர் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார்.

அவருடைய தொகுதிதான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி. கடந்த மூன்றரையாண்டு காலமாக இந்த தொகுதியில் நடந்துள்ள திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளையே ஞிங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் அவரது எண்ணத்தில் உதித்த ஆழமான திட்டமாகும். மக்கள் முதல்வரை எதிர்த்து யாரும் போட்டி போடமுடியாது. இந்த தொகுதியில் யார் எதிரி என்று தெரியவில்லை. எதிரியே இல்லாத தொகுதி இங்கே தான்.
ஆள்இல்லாத கடையில் டீ கடையில் யாருக்காக டீ ஆற்றுவது என்பது தெரியவில்லை.

அப்படிப்பட்ட இந்த தேர்தலில் நமக்கு யாரும் போட்டியில்லை. எத்தனை இலட்சம் ஓட்டு வித்தியாத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் இப்போது கேள்வி. இந்த தொகுதியில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி கிடைத்துள்ளது. இந்த தொகுதிதான் அம்மாவின் முன்னோடி தொகுதியாகும். எனவே, ஞிங்கள் எண்ணிப்பார்த்து உங்களது ஓட்டுகளை அள்ளி ஓட்டுப்பெட்டியில் போடவேண்டும். இவ்வாறு திரைப்பட இயக்குனர் மனோபாலா பேசினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது.

கடந்த மூன்றரையாண்டுகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் அம்மா செய்த சாதனைகளை யாருமே முறியடிக்கமுடியாது. இதுதான் பொற்கால ஆட்சி. அம்மா தொகுதிதான் இந்தியாவிலேயே வழிகாட்டும் முதன்மை தொகுதியாகும். எனவே, எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டவேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை ஞிங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அம்மாவின் செல்வாக்கு முன்னால் எந்த அணியும் வெற்றி பெறமுடியாது. அமோக ஓட்டுவித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதி அம்மாவின் கோட்டை என நிருபணம் ஆவது உறுதி இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து வாசன் நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திரைப்பட இயக்குனர் மனோபாலா, அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் திறந்த ஜீப்பில் தெருத்தெருவாக சென்று அதிமுகவிற்கு ஓட்டு கேட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து