முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பாராளுமன்றம் ஏப்ரல் 23-ம் தேதி கலைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - அரசாங்கம் முன்வைத்த இடைக்கால வரவு, செலவு திட்டமானது, மக்களுக்கான 99 சதவீத வரவு, செலவு திட்டமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம், மக்களுக்காக ஒரு சதவீத வரவு, செலவு திட்டத்தையே முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருட்டு, மோசடி அற்றபோட்டி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப அனைவருக்கும் சந்தர்ப்பம் ஏர்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என்று பிரதமர் மந்திரி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அந்த அமைப்புகள், கருத்தரங்குகள் உட்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து