முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தொகுதி முழுவதும் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஸ்ரீரங்கம் நகரில் இரண்டாவது வார்டு கீதாபுரத்தில் தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஸ்டேட்பாங்க் காலனி, மாரியம்மன்கோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிமுக நிர்வாகிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுவீடாக ஏறி அம்மா அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து அதிமுக வேட்பாளுருக்காக ஓட்டு கேட்டார்.

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் அமைச்ர் எம்.சி.சம்பத் ஓட்டு கேட்டார். எல்லா இடங்களிலும் அம்மாவிற்கே எங்கள் ஓட்டு என்று பொதுமக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.அமைச்சருடன் கடலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், விருத்தாச்சல நகராட்சி தலைவர் அருள்அழகன், நகர அம்மா பேரவை செயலாளர் சந்திரகுமார், நகர செயலாளர் வி.டி.கலைச்செல்வன், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பச்சையம்மாள், வழக்கறிஞர் பிரியா சிவக்குமார், வட்ட செயலாளர் மகேஷ்வரன் மற்றும் கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் பெண்களும் இணைந்து அதிமுகவிற்கு ஓட்டு கேட்டனர். தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் அந்த பகுதிகளில் முகாமிட்டு ஓட்டு வேட்டையாடிவருகிறார்.மனோபாலா ஆகியோர் இரட்டை இலைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி கேட்டுக்கொண்டனர். அருகில் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து