முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எரிசக்தி ஆய்வு மைய மாநாட்டில் அர்னால்டு பங்கேற்பு

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

இதில் பிரபல ஆலிவுட் நடிகரும் அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் கலந்து  கொள்கிறார்கள்.

அர்னால்டு கலந்து கொள்வதன் மூலம் இந்த மாநாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் 2007, 2012–ம் ஆண்டுகளில் நடந்த பசுமை மாநாட்டில் அர்னால்டு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து