முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடும் பனிப்புயல் வீசியது. அதனால் பல நகரங்கள் பனியால் மூடின. ஆயிரக்கணக்கான விமான சேவைகளும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வட கிழக்கு அமெரிக்காவில் தற்போது மீண்டும் பனிப்புயல் வீசுகிறது.
 
நியூயார்க் நகருக்கும் பாஸ்டனுக்கும் இடையே மழை போல் பனி கொட்டுகிறது. இதனால் வீடுகளின் கூரைகள் ரோடுகளில் 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட தூரம் சென்று பணியாற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். சிகாகோ நகரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது.

சிகாகோ, பாஸ்டன், நியூயார்க் நகரில் உள்ள விமான நிலையங்களில் பனிப்போர்வை போல் படர்ந்து கிடக்கிறது. இதனால் அங்கிருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. மிட்வெஸ்ட்டில் இருந்து நியூ இங்கிலாந்து வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வெர்மோன்ட்,நியூ ஹம்ப்ஷிர், மெய்னே, மகாசூசெட்ஸ், ரோத்தீவு மற்றும் வடக்கு கனெக்டிக் பகுதிகளை பனிப்புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து