முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட்: தூர்தர்ஷன் ஒளிபரப்ப அனுமதி

புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - 2015ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்ய டெல்லி ஐகோர்ட் விதித்த தடை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பினாகி சந்திரபோஸ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இ.எஸ்.பி.என் தொலைக்காட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்ய கடந்த 4ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து