முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சஞ்சய்தத்தின் 10 நாள் விடுமுறை குறைப்பு

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

மும்பை - நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று புனே  எரவாடா ஜெ தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சஞ்சய்தத்  பரோலில் மும்பை வந்தார். அவருக்கு 14 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 8–ந் தேதி அவர் ஜெயிலுக்கு திரும்பி இருக்க வேண்டும்.பரோலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று  சஞ்சய்தத் மனு செய்து இருந்தார்.
 
அந்த மனுவை பரிசீலனை செய்த மராட்டிய உள்துறை அமைச்சகம் ஜனவரி 10–ந் தேதி தான் கோரிக்கையை நிராகரித்தது. அதுவரை சஞ்சய்தத் மும்பையிலேயே தங்கி விட்டார். கோரிக்கை  நிராகரிக்கப்பட்ட பின்பு தான் சஞ்சய்தத் எரவாடா ஜெயிலுக்கு சென்றார்.இதற்க கூடுதலாக 2 நாட்கள் தங்கியது பற்றி மராட்டிய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மீரா போர்வாங்கர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையின் முடிவில் சஞ்சய்தத் மீது நடவடிக்கை எடுக்க முடிவு  செய்யப்பட்டது. வழக்கமாக சிறை கைதிகள் பரோலில் வந்த போது கூடுதலாக ஒரு நாள் தங்கினால்  ஒரு நாளைக்கு 5 நாள் விடுமுறை ரத்து செய்யப்படும். அதன்படி சஞ்சய்தத்துக்கான விடுமுறையில் 10  நாட்கள் குறைத்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து