முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: சார்க் நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மோடி, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் சிறிசேனா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்நாட்டு வீரர்கள் கலந்து கொள்வதால் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
சார்க் நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தும் வகையில் வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் விரைவில் சார்க் யாத்திரை' மேற்கொள்வார் என்றும் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து