முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் புழக்கத்துக்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஒரு ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்ததால் மத்திய அரசு கடந்த 1994ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை நிறுத்தியது. அதை தொடர்ந்து 1995ம் ஆண்டு பிப்ரவரியில் 2 ரூபாய் நோட்டும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் தாள் அச்சடிக்கப்பட்டு வந்தன. ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மதிப்பில் நாணயங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன. சமீப காலமாக நாணயங்களுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தொடர்ந்து ரூபாய் நோட்டு புழக்கத்தை ஆய்வு செய்த மத்திய அரசு நாணயங்களுக்கு பதில் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது என்று முடிவு செய்தது.

அதன்படி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு விநியோகத்துக்கு விரைவில் வருகிறது. இதை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சடிக்கும். 2011 நாணய சட்டத்தின் படி இந்த நோட்டுகள் இருக்கும். நிதி துறை செயலாளர் கையொப்பம் அதில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் புழக்கத்துக்கு வரும் ஒரு ரூபாய் நோட்டு பச்சை நி்றத்தில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து