முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ - ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜப்பானில் நேற்று காலை 8 மணி அளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர். அங்கு 6.9 ரிக்டர் ஆக நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இவாட் மாகாணத்தில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் அது உருவாகியுள்ளது.

இதனால் கடலில் வழக்கத்துக்கு மாறாக அலைகள் உயரமாக எழும்பின. நில நடுக்கம் ஏற்பட்ட 45 நிமிடங்களுக்கு பிறகு 10 செ.மீ. அளவுக்கு அலைகள் உருவாகின. அவை மேலும் 1 மீட்டர் 83 அடி உயரத்துக்கு எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

உடனே அங்குள்ள மக்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி கூட்டம் கூட்டமாக புறப்பட்டு சென்றனர்.
இந்த நில நடுக்கம் 690 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியாவிலும் உணரப்பட்டது. எனவே நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சேதமதிப்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சேத விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து