முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அதிபர் அடுத்த மாதம் சீனா பயணம்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அரசு முறைப் பயணமாக அடுத்த மாதம் சீனா செல்கிறார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை உதவி அமைச்சர் லீ ஜியான்சாவோ கூறியதாவது:

அடுத்த மாதம் 26ம் தேதி சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வரும் சிறிசேனா, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தொடர்புகள், நல்லுறவு குறித்து விவாதிக்கப்படும்.

சீனாவின் சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை சீறிசேனா தலைமையிலான புதிய அரசு தொடரும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். சிறீசேனாவின் சீனப் பயணத்துக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து