முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை போர்க் குற்ற அறிக்கை தாக்கல் தாமதமாகும்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

ஜெனீவா - ஐநா மனித உரிமை கவுன்சிலில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவிருந்த இலங்கை போர்க் குற்ற அறிக்கை, ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐநா மனித உரிமை கவுன்சிலின் உயரதிகாரி ஜெயிடு ராத் அல் ஹுசைன் கூறியதாவது:

வரும் மார்ச் மாதம் 25ம் தேதி நடைபெறவிருக்கும் 28வது ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு இது குறித்து மேலும் விரிவான உள்நாட்டு  விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தது. இதன் மூலம் புதிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்ற அடிப்படையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுவதாக ஜெயிடு ராத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து