முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை இடையே நட்ப்புறவு: சீனா மகிழ்ச்சி

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நெருங்கிய நட்புறவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சீனா தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை குறித்தும், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்தும் பெய்ஜீங்கில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

இலங்கையும், இந்தியாவும் சீனாவுக்கு நட்பு நாடு மட்டுமின்றி முக்கிய அண்டைய நாடுகளாகவும் உள்ளன. அமைதி வளமையை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தவே சீன அரசு விரும்புகிறது. இந்தியா - இலங்கை இடையே நட்புறவு அதிகரித்திருப்பதை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா, இலங்கை, சீனா இடையேயான நெருங்கிய நட்புறவு 3 நாடுகளுக்கும் சமூகமான நிலையை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி இந்த பிராந்தியம் முழுவதும் அமைதியை உறுதி செய்யும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இந்தியா - இலங்கை இடயே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கையில் சீன ஆதிக்கத்தை அதிகரிக்க விடாமல் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து