முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி கிளையில் கள்ள ரூபாய் நோட்டுகள்

புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை மேலாளர், காந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை அளித்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் திட்டத்தின் கீழ் மர்ம நபர்கள் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை அளித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து