முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஏலம்: ரூ.15 லட்சம் கோடி வருமானம் திரட்ட திட்டம்

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - நிலக்கரி சுரங்க ஏலம் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு ரூ. 15 லட்சம் கோடி வருமானம்  கிடைக்கும் என மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிலக்கரி சுரங்க ஊழல் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1 லட்சத்து 82 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை தணிக்கை  அதிகாரி குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை  அதிரடியாக ரத்து செய்தது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களை  ளிப்படையாக ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. பல சுற்றுகளாக இந்த ஏலத்தை நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. முதல் சுற்று ஏலம் வரும் 23ம் தேதி முடிவுக்கு வருகிறது. இரண்டாவது சுற்று  ஏலம் பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி 3ம் சுற்று ஏலம் தொடங்குகிறது. நேற்று முன்தினம் 19 சுரங்கங்கள் ஏலத்துக்கு வந்தன. இதில் 15 சுரங்களை வாங்க நிறுவனங்கள் போட்டி போட்டு  ஏலம் கேட்டன.

ஆன்லைனில் விடப்பட்ட இந்த ஏலம் வாயிலாக அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி  கிடைத்திருப்பதாக நிலக்கரி துறை அமைச்சர் கோயல் தெரிவித்தார். மத்திய அரசு வசம் உள்ள மொத்தம் 204  சுரங்கங்கள் வாயிலாக அடுத்த 30 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ. 15 லட்சம் கோடிக்கு குறையாமல் வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து