முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடை மழையால் ஆஸ்திரேலியா-வங்கதேசம் ஆட்டம் ரத்து

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன் - அடை மழை விடாது பெய்ததால் ஆஸ்திரேலியா, வங்கதேசம் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வங்கதேசம் தனது முதல் போட்டியில், 105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

வங்கதேசம் கடந்த 6 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானை வீழ்த்திய விதத்தை பார்த்தாலும், வங்கதேசம் எழுச்சி பெற்றதாகவே தெரிந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் இந்திய நேரப்படி நேற்று காலை 9 மணிக்கு பிரிஸ்பேனில் தொடங்கும் ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால் புயல் மழை காரணமாக மதியம் 12.15 மணியாகியும் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை.

மழை தொடர்ந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த பிரிவில் 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகியவை 2வது இடத்தை பகிர்ந்தபடியும் உள்ளன. வங்கதேசத்துக்கு கிடைத்த புள்ளியால் இங்கிலாந்துக்குதான் நெருக்கடி அதிகரித்துள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் தோற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து