எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - உலக கோப்பை லீக்கில் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 307 ரன்கள் குவித்த்து இந்தியா அபார வெற்றி பெற்றது. திறமையான அணி என்று புகழப்பட்ட தென் ஆப் ரிக்கா வெறும் 103 ரனகள் மட்டும் எடுத்து படுதோல்வியை தழுவியது.
உலக கோப்பை லீக் ஆட்டம் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய தீர்மானித்தது.ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். ஆனாலும் நிலை குலையாத இந்திய வீிரர்கள் தவான், ரகானே ஆகியோர் அடித்து ஆடி ரன்களை குவித்தனர்.
ஷிகர் தவானின் அபார சதம், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானேவின் சிறப்பான ஆட்டம், கேப்டன் டோணியின் கடைசி நேர அதிரடி காரணமாக இந்தியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களைக் குவித்தது.
தென் ஆப்பிரி்க்காவின் பந்து வீச்சை மிக சாதுரியமாக நேற்று சந்தித்தது இந்தியா. ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய இந்தியா பின்னர் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சை அடித்து நோறுக்கி விட்டார். ஸ்டெயின், பிலான்டர், மார்னி மார்க்கல் என அனைவரையும் அடித்து நொறுக்கினார்.
ரோஹித் சர்மா டக் அவுட் ஆன பிறகு கோஹ்லியும், தவானும் ஜோடி சேர்ந்தனர். கோஹ்லி 46 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி விட்டார். தொடர்ந்து ஷிகர் தவான் அதிரடியாக ஆடினார். 137 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். முன்னதாக ரசிகர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் ரன்களைக் குவித்து வந்த ஷிகர் தவான் - விராத் கோஹ்லி ஜோடி 127 ரன்கள் சேர்த்து பிரிந்தது. 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இம்ரா் தாஹிர் பந்து வீச்சில் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். 27.1வது ஓவரில் தாஹிர் வீசிய பந்தை கோஹ்லி அடிக்க, அதை டூபிளஸிஸ் கேட்ச் செய்து கோஹ்லியை வெளியேற்றினார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு அச்சுறுத்தும், பயமுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தவானும், ரஹானேவும் சிறப்பாக ஆடினர். தவான் சிறப்பாக ஆடி இந்த உலக கோப்பையில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் போன பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. ரஹானே அதிரடியாக ஆடி வந்த நிலையில் அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. டோணி மட்டும் சற்று அதிரடியாக ஆடி 18 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தொடர்ச்சியாக அவர் 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். கடைசி நேர சொதப்பல் காரணமாக இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களை எடுத்தது.
308 என்ற கடினமான இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் வீழ்ந்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்த அம்லா, 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா வீசிய பந்தை தூக்கி அடித்து ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது முக்கியத் திருப்பமாக அமைந்தது. அடுத்து கேப்டன் ஏப் டிவில்லியர்ஸும், டுபிளஸ்ஸிஸ்ஸும் இணைந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர். இந்த ஜோடியை அருமையான ரன் அவுட் மூலம் கேப்டன் டோணியும், மோஹித் சர்மாவும் பிரித்தனர்.
ஏப் டிவில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுபிளஸ்ஸிஸ்ஸை ஷிகர் தவான் கேட்ச் செய்தார். டுபிளஸ்ஸிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஜேபி டுமினியும் ஆட்டமிழந்தார். ஒரு ரன் எடுத்திருந்த ஸ்டெயினும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்த தென் ஆப்பிரிக்கா 40.2 ஓவர்களில் அணைத்தது விக்கெட்களையும் இழந்தது. 177 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
முக்கியமான அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளஸ்ஸிஸ், மில்லர், அம்லா, டுமினி ஆகியோரை இந்திய பவுலர்கள் சரியான சமயத்தில் வீழ்த்தியதே இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.
137 ரன்கள் எடுத்து இந்தியாவை பேட்டிங்கில் நிமிர வைத்த ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் வரலாற்றை முறியடித்தது இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இதற்கு முன்பு 1992, 1999 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காதான் வென்றிருந்தது.
அந்த வரலாற்றை நேற்று திருத்தி எழுதி விட்டது இந்தியா. முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வீழ்த்தியுள்ளது. கடந்த 1992 போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீ்ழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் இந்தியா 180 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 181 ரன்கள் எடுத்து வென்றது. 1999 போட்டியில் இந்தியா 253 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 254 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 308 ரன்கள் எடுத்தது. அதற்கு தென் ஆப்பிரிக்கா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா வரலாற்றை மாற்றி அமைத்தது. இந்திய கேப்டன் டோணியின் கேப்டன்ஷிப்புக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். அபாரமான கேப்டன்ஷிப் என்று கங்குலி கூறியுள்ளார். பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என டோணி உண்மையிலேயே ஒரு சிறந்த கேப்டன் என்று புகழந்து உள்ளனர்.
இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். அடுத்து இந்தியா பிப்ரவரி 28ம் தேதி பெர்த்தில் நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இதுவும் பகல் இரவுப் போட்டியாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.