முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் கார் விபத்தில் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

நகரி - ஆந்திராவில் லட்சுமி நரசிம்மா சினிவிஷன் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வந்தவர் நாகிரெட்டி. 33 வயது நிரம்பிய இவர் இயக்குனரும், எழுத்தாளருமான மதன்மோகன் ரெட்டியுடன் அனந்தபுரம் சென்று விட்டு தனது சொந்த காரில் தச்சுபவுலி நோக்கி சென்று கொண்டிருந்தார். சம்சாபாத் அருகே கவுத்வால்கேட் அருகே சென்ற போது ரோட்டின் குறுக்கே நாய் பாய்ந்தது. நாய் மீது மோதாமல் இருக்க காரை நாகிரெட்டி திருப்பினார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நசுங்கியது. படுகாயம் அடைந்த நாகிரெட்டியும், இயக்குனர் மதன்மோகன்ரெட்டியும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நாகிரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இயக்குனரிடம் கதை கேட்டபடியே நாகிரெட்டி கார் ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மரணமடைந்த நாகிரெட்டிக்கு சியாமளா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

நாகிரெட்டி ராகுல் ரவீந்திரன் நடித்த பெல்லி புத்தகம் என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது ஆதி நடிக்கும் கரம் என்ற படத்தை எடுத்து வருகிறார். இளம் தயாரிப்பாளர் மரணமடைந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகிரெட்டி உடலுக்கு ஆதியின் தந்தை சாய்குமார் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து