முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் தற்கொலை தாக்குதல்: 25 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

மொகாடிஷூ - சோமாலியா நாட்டு தலைநகர் மொகாடிஷூவில் உள்ள விடுதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

முதலில் வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் சென்ட்ரல் ஓட்டல் விடுதியின் வாயிலில் மோதி வெடிக்க செய்தார். அதனை தொடர்ந்து அந்த விடுதிக்குள் நுழைந்த மற்றொரு நபர் தன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் மொகாடிஷூ துணை மேயர், இரு எம்.பி.க்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.

எனினும் உயிரிழந்தவர்களில் பயங்கரவாதிகளும் அடங்குவார்களா என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவோடு தொடர்புடைய அல்ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து