முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரோசய்யா ஆகியோருக்கு அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா , பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்த நாளையொட்டி, நீங்கள் அன்புடன் அனுப்பிய வாழ்த்து செய்திக்காக நான் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்தநாளை நினைவில் வைத்து இருந்து டுவிட்டரில் உங்கள் வாழ்த்துக்களை மிகவும் கருத்தோடு அனுப்பியிருக்கிறீர்கள்.பதிவு செய்தமைக்காகசெய்தமைக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கவர்னர் கே.ரோசய்யாவுக்கு, ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எனது பிறந்தநாளையொட்டி நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்களுக்காகவும், மலர்கொத்து அனுப்பியதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து