எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - பாராளுமன்ற லோக்சபையில் இன்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மூலம் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று மரபுப்படி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மறுநாள் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
காரணம் இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முழுமையான முதல் ரயில்வே பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டங்கள் பற்றியும், நிதி ஒதுக்கீடு பற்றியும் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கு பிறகு கடந்த 6ம் தேதி தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் சென்னை, குமரி இடையே இரட்டை அகல ரயில் பாதை உள்ளிட்ட 10 முக்கிய ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். மெட்ரோ ரயில் திட்டம், பறக்கும் ரயில் திட்டம் போன்றவை தொடர்பாகவும், அதற்கு தேவையான நிதி தொடர்பாகவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்திற்கு இரண்டு ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி பல ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் மட்டும் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய ரயில்களும் விடப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்கள் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசும் போதிய நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசு நமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா என்பது இன்று தெரியவரும்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பட்ஜெட் தாக்கல் குறித்து துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். ரயில்வே துறை தற்போது நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அத்துறையை மேம்படுத்த விரும்பும் சுரேஷ் பிரபு பல்வேறு திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க கூடும். இந்த பட்ஜெட் மூலம் ரயில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காரணம், டீசல் விலை குறைந்தாலும் ரயில் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சர் ஏற்கனவே அறிவித்து விட்டார். மேலும் ரயில்வேயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி தேவைப்படுவதாகவும் ரயில்வேயிடம் நிதி பற்றாக்குறை இருந்து வருவதாகவும் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள சுமையை மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்கனவே கூறியிருந்தார்.
ஆகவே ரயில் கட்டணம் குறையாது என்பது நன்றாக தெரிகிறது. மேலும் ரயில்வே துறையில் தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பு நிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. பயணிகளுக்கு ரயில் நிலையங்களிலேயே உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அதாவது காங்கிரஸ் கூட்டணி அரசால் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் நிலுவையில் உள்ளன.
திருச்சி - நாகர்கோவில், செங்கல்பட்டு - திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி கிடக்கிறது. சென்னை - குமரி இருவழி பாதை அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. சென்னை ராயபுரம், தாம்பரம் ரயில் நிலையங்களை ரயில் முனையங்களாக மாற்றப்படும் என கடந்த 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் ரயில்வே சம்பந்தமாக சில திட்டங்கள் முடியாமல் பாதியிலேயே நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற இந்த பட்ஜெட்டில் அரசு கோரியபடி போதிய நிதி ஒதுக்கப்படுமா, புதிய ரயில்கள் விடப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. நாளை 27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 28ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை தொடர்பாக சில அறிவிப்புகளை அவர் வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.