முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெரசாவின் சேவை பின்னணியில் மதமாற்றம்: பாஜக

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கிறி்ஸ்தவ மதத்தை பரப்புவதே தனது நோக்கம் என்பது அன்னை தெரசாவே ஒப்புக் கொண்ட உண்மை என பாஜக எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மீனாட்சி லேகி கூறினார்.

அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே முக்கியமானதாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகியும் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
 
அன்னை தெரசா குறித்து கூறப்பட்ட கருத்துக்களை காங்கிரஸ் கட்சியினரும், வேறு சில தலைவர்களும் அரசியலாக்குகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் அன்னை தெரசா குறித்து தாங்கள் கொண்டுள்ள பார்வையை பொதுமக்கள் மீது திணிக்க கூடாது.

தான் மதமாற்றம் செய்யவே வந்ததாக அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அன்னை தெரிசா பேட்டி ஒன்றில் கூறுகையில், அனைவரும் என்னை சமூக சேவகர் என கருதுகின்றனர். நான் சமூக சேவகர் கிடையாது. நான் கர்த்தருக்கு சேவை செய்து வருகிறேன். மக்களை கிறிஸ்தவ மதத்திற்குள் கொண்டு வருவதே எனது பணியாகும் என்றார். எனவே அன்னை தெரசா குறித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மீனாட்சி லேகி கூறினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்தை ஆதரிக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அவரது நிலைப்பாடு குறித்து  கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து