முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட்டில் ஓய்வெடுக்கும் ராகுல்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

நைனிடால் - உத்தரகாண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி தங்கி ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி தழுவியதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கட்சி பணிகளில் இருந்து விடுப்பு எடுத்து வெளிநாட்டிற்கு சென்றதாக தகவல்கள் தெரிவித்தன.

தாய்லாந்து போவதற்காக ராகுல் காந்தி டிக்கெட் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கு போகவில்லை. மாறாக இந்தியாவில்தான் ஓய்வெடுத்து வருகிறார். அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ராகுல் விண்ணப்பித்து இருப்பதாகவும், அதற்கு அவரும் அனுமதி வழங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கட்சிப் பணிகளிலிருந்து எனக்கு விடுப்பு தேவை என்று முதலில் அவர் பாங்காங் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அவர் அங்கு போகவில்லை. மாறாக உத்தரகாண்ட்டில் அவர் ஓய்வெடுத்து வருவது தெரிய வந்துள்ளது. அங்குள்ள ஒரு இடத்தில் டெண்ட் அடித்து அதில் ராகுல் காந்தி தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி டெண்ட்டுக்குள் அமர்ந்திருப்பது போல படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டெண்ட்டுக்கு வெளியே அமர்ந்து ராகுல் காந்தி போனில் பேசுவது போன்ற படமும் அதில் இடம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து