எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை -தஞ்சை பிரகதீஸ்வரர், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் உட்பட நாடு முழுவதும் 25 கோவில்களை புனரமைக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் சென்னையில் கூறியதாவது:-
மத்திய அரசின் உத்தரவை ஏற்று மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 25 கோவில்களை தேர்வு செய்துள்ளது. இந்த கோவில்கள் 500 முதல் ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவையாக உள்ளன.
இந்த கோவில்களை 5 ஆண்டுகளில் புனரமைத்து மீண்டும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் என 2 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் மாமல்லபுரம் கோவில் பழமையான கோவில் கோபுரங்கள், கடற்கரை உப்பு காற்று மற்றும், காற்றில் உள்ள சிறு, சிறு மணல் துகள்களால் கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட புராதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இதனை இப்படியே விட்டுவிட்டால் அவை விரைவில் சிதிலமடைந்துவிடும் என்பதால் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள 2 கோவில்களை தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள 25 கோவில்களை புனரமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்காக தற்போது ஆரம்ப கட்ட ஆய்வுகள் நடந்து வருகிறது.
இவற்றை புனரமைக்க ஆகும் செலவு, நேரம் ஆகியவை கணக்கிடப்பட்டு வருகிறது. அத்துடன் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 11 ஏக்கர் பரப்பளவிலான அகழியை மாநில அரசு மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைத்துள்ளது. உடைந்து கிடக்கும் அகழி மதில் சுவர்கள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு வருகிறது.
அதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கடல் காற்றில் இருந்து பாதுகாக்க கோவில் கோபுரங்களில் கெமிக்கல் வர்ணம்பூசுவது குறித்தும், கோவிலின் கிழக்கு பகுதியில் சவுக்கு மரம் நடவும் ஆலோசனை நடந்து வருகிறது. முதல்கட்டமாக மத்திய அரசு செயலாளர் மற்றும் மத்திய தொல்லியல் துறையின் தமிழக உயர் அதிகாரிகளும் சேர்ந்து ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர்.
பண்டைய வரலாறுகள், கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக அகழ் ஆராய்ச்சியிலும் மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழ் ஆராய்ச்சியில் ‘முதுமக்கள் தாழி‘ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் கண்டெடுக்கப்பகட்ட எலும்புகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பண்டைய வரலாறுகளும் தெரியவரும். இந்த தகவல்களை புத்தக வடிவில் கொண்டுவருவதற்காக மத்திய தொல்லியல் துறையின் நிதி மூலம், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மாமல்லபுரம் அருகே சால்வான்குப்பம் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ் ஆராய்ச்சியின் போது 8 அடி ஆழத்தில் புதைந்திருந்த முருகன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்தில் வேளாங்கண்ணி மற்றும் காஞ்சீபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
அதேபோல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 450 இடங்கள் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு தொல்லியல் துறை அதிகாரிகள் கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,