முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ரெயில்கள் இல்லை: பயணிகள் ஏமாற்றம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஒவ்வொரு வருடமும் ரெயில்வே பட்ஜெட் வெளியிடப்படும் போது புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு கட்டாயம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் கூடுதல் ரெயில்களும் அறிவிக்கப்படும். மேலும் புதிய ரெயில் இணைப்பு பாதை பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்படும்.

பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு நிறைய இருக்கும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் ஏற்கனவே போடப்பட்ட திட்டங்களில் புதிய ரெயில்களை இயக்குவதற்கு மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில் பாதைகள் அமைப்பதற்கும் நிதி தேவைப்படுகிறது.

எனவே இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் அதிக அளவில் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. அந்த வழித்தடங்களில் இன்னும் கூடுதலாக ரெயில்களை விட்டால் அதிக நெருக்கடி ஏற்படும். இதனால் இப்போதைக்கு புதிய ரெயில் பற்றிய அறிவிப்பு இல்லை என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து