முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பயணிகள் அறைகளில் சிசிடிவி கேமிரா: அமைச்சர்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ரயில்களில் பயணம் செய்யும் போது பெண் பயணிகளின் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மேலும் கூறியதாவது,

மூத்த குடிமக்கள் ரயில் நிலையங்களில் பயன்படுத்த வீல்சேர்களை(சக்கர நாற்காலி) புக்கிங் செய்யலாம். அப்பர் பெர்த்துகளை மூத்த குடிமக்களும் பயன்படுத்த வசதி செய்து தரப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு மிடில் பெர்த்துகளிலும் இடவசதி செய்து தரப்படும். லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்க ரூ. 120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரயில் பெட்டிகளின் நுழைவு வாயிலை பெரிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மூத்த குடிமக்கள் நலனுக்காக ஆன்லைன் மூலம் சக்கர நாற்காலிகளை பதிவு செய்யலாம். ரயில் நிலையங்களை மேம்படுத்த எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி நிதி வழங்க வேண்டும். முன் பதிவில்லா பெட்டிகள் அதிகம் இணைக்கப்படும். பெண் பயணிகளின் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்தப்படும். அதிவேக புல்லட் ரயில்கள் இரண்டு ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து