எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 39 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16,ஆயிரத்து 798.19 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். \மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று காலை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:
அம்மா வழிகாட்டுதலின்படியான அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 39 லட்சத்து 8 ஆயிரத்து 783 விவசாயிகளுக்கு ரூ.16, ஆயிரத்து 798. கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 7 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் (2014-15) கூட்டுறவின் மூலம் ரூ.5000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில், 22.2.2015 வரை 9,25,425 நபர்களுக்கு ரூ.4,732.17 கோடி அளவிற்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
6,61,668 ஆதிதிராவிட பழங்குடியினருக்கு ரூ.2,447.09 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 7,54,882 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.3,130.68 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 24,40,566 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.10,062.04 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் விளைபொருள்களின் விலை மிகக் குறைவாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்து எதிர்காலத்தில் இலாபகரமான விலை கிடைக்கின்ற பொழுது விற்றுப் பயனடையும் வகையில் 2011-12ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3,317 கிடங்குகள் கிராமப்புற கூட்டுறவுச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள விளைபொருள்களுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.865.00 கோடி தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட இதர வகையான கடன்களை விவசாயிகளுக்கு அவர்கள் கேட்டவுடன் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும், எந்தவிதப் புகாருக்கும் இடம் கொடுக்காவண்ணம் மாதாமாதம் ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் குறைந்த விலையில் உரம் தங்குதடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், நடப்பாண்டில் 31.1.2015 வரை 12,15,916 விவசாயிகளுக்கு 4,83,577.970 மெட்ரிக் டன் அளவிற்கு உரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.774.31 கோடி ஆகும்.
மேலும், அனைத்து வகையான உரம் மற்றும் விதை போன்றவைகளை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அளவில் உரிய நேரத்தில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக உரிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு வங்கிகள் கடன் வசதி அளித்து வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 24,354 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.82.25 கோடி அளவிற்கு வட்டியில்லாக் கடனாக பெற்றுள்ளார்கள்.
வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 24.2.2015 வரையில் 62,32,025 கிலோ டன் காய்கறிகள் ரூ.17.51 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு நிறுவனங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளும், குறித்த நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்றும், இதில் முறைகேடு ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட விற்பனையாளர் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கட்டுப்பாடற்ற பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என்றும், அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை களப்பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நியாயவிலைக் கடைகள் பழைய கட்டடமாகவும் சிதலமடைந்த நிலையில் இருந்தால் அதனைக் கண்டறிந்து உடனடியாக புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதால் நடப்பாண்டில் 91 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படடுள்ளது என்பதை அமைச்சர் செல்லூர் ராஜூ மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நிறைவு செய்யும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுமாறும், கூட்டுறவுத்துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத்தக்க வகையில் திட்டங்கள் வகுத்து திறம்பட செயலாற்றிடுமாறும் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் .முகம்மது நசீமுத்தின், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் பதிவாளர்கள் கே.இராஜேந்திரன், .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.