முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - அமெரிக்காவில் அதிபர் ஒபாமா மீது தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க சதி திட்டம் தீட்டியதாகவும் மத்திய ஆசியாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அப்துரஸூல் ஹஸானோவிச் ஜூராபோவ், அக்ரார் சைதாக்மெடோவ், அப்ரார் ஹபிபோவ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கஜகஸ்தானை சேர்ந்தவர் சைதக்மேதவ். ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக துருக்கி வழியே சிரியா செல்ல முயன்ற போது நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உஸ்பெகிஸ்தனானை சேர்ன்த ஜூராபோவும் இதே நோக்கத்துடன் அடுத்த மாதம் துருக்கி செல்வதற்கான விமான பயணசீட்டை வாங்கியிருந்தார். அதே நாட்டை சேர்ந்த ஹபிபோவ் சைதக்மேதவ் ஐ.எஸ்.ஸில் இணைவதற்காக நிதியுதவி அளித்துள்ளார். ஐ.எஸ். உத்தரவிட்டால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்வேன் என்று ஐ.எஸ்ஸூக்கு ஆதரவான உஸ்பெக் மொழி இணையதளம் ஒன்றில் ஜூராபோவ் குறிப்பிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2014ம் ஆண்டு அவர் உளவுத்துறையினரின் கவனத்துக்கு வந்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சைதக்மேதவ், ஜூராபோவ் ஆகிய இருவரும் ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கு துருக்கி வழியாக சிரியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து