எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்லாந்து - ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டத்தால் 151 ரன்னை போராடி நியூசிலாந்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் வெற்றி பெறும் முக்கிய அணிகளில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் நேற்று மோதியது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பலம் வாய்ந்த அணி என்று கருதப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் வெறும் 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து குறைந்த ஓவர்களிலேயே 151 ரன்னை எட்டி விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. அவர்களும் மிகப் பெரிய போராட்டத்துக்கு பிறகே ஆஸ்திரேலியாவை வெற்றி கண்டனர்.
உலக கோப்பையை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்தின் ஆக்லாந்து மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவை இவ்விரு அணிகளும், என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இதில், நியூசிலாந்து ஏற்கனவே இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தளவில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே அந்த போட்டியில் ஒரு புள்ளிதான் கிடைத்தது.
இவ்விரு அணிகளும் இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தொடங்கிய போட்டியில் மோதின. கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆடாத ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இப்போட்டிக்கு உடல் தகுதி பெற்றார். எனவே ஜார்ஜ் பெய்லி இப்போட்டியில் ஆடவில்லை.டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து விளாசிக் கொண்டிருந்தபோது டிம் சவுத்தி பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். 23 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன், வெட்டோரி பந்து வீச்சில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அப்போது ஆஸ்திரேலியா, 13 ஓவர்களில், 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன்பிறகுதான் ஆஸ்திரேலியாவின் சரிவு ஆரம்பித்தது. டேவிட் வார்னர் 34 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும், மேக்ஸ்வெல் 1 ரன்களிலும், கேப்டன், மைக்கேல் கிளார்க் 12 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். மிட்சேல் மார்ஷ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், ஜான்சன் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். ஓரளவு போராடிய விக்கெட் கீப்பர் ஹேடின் 43 ரன்களில் வீழ, 32.2 ஓவர்களிலேயே, 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. பாட் கமின்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஓரளவு வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்டது டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சுதான். 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெட்டோரி மற்றும் டிம் சவுத்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பலம்மிக்க ஆஸ்திரேலியாவை 151 ரன்களுக்குள் மடக்கிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி பேட்டிங்கை தொடங்கினர்.
தொடக்க வீரர்கள், மார்டின் குப்தில் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவருமே அதிரடி காண்பித்தனர். இருப்பினும் 11 ரன்கள் எடுத்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் பந்து வீச்சில் பட் கம்மின்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் குப்தில். மறுமுனையில் தாண்டவம் ஆடிய மெக்கல்லம், 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
ஆனால் மறுபக்கமோ விக்கெட்டுகள் மளமளவென சரிவடைய தொடங்கின. ரோஸ் டெலர் 1 ரன்னிலும், கிரான்ட் எலியட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆக 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து. இருப்பினும் கேன் வில்லியம்சன் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி நிதான ஆட்டம் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோரி ஆன்டர்சன் அவுட் ஆனார்.
அப்போது அணியின் ஸ்கோர் 131 ரன்களுக்கு, 5 விக்கெட் என்ற அளவில் இருந்தது. மேற்கொண்டு, 21 ரன்களே தேவைப்பட்டன.ஆனால் நிலைமை அப்போதுதான் தலைகீழாக மாறியது. அணியின் ஸ்கோர் 145ஆக இருந்தபோது டேனியல் வெட்டோரி, 146 ரன்களாக இருந்தபோது ஆடம் மில்னே மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 22.4 ஓவர்களில் நியூசிலாந்து 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் மில்னே, டிம் சவுத்தி ஆகியோர் ஸ்டார்கின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நியூசிலாந்து வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டன.
ஆனால் நியூசிலாந்தின் அதிருஷ்டம், அடுத்த ஓவரை சந்திக்கும் வாய்ப்பு வில்லியம்சனுக்கு கிடைத்தது. என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்சர் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார் வில்லியம்சன். 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மிரட்டினார் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க். இருப்பினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முடக்கிய டிரென்ட் பவுல்ட்டுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந