முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு கருப்பு பணத்தை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சுவிஸ் நாட்டு வங்கியிடமிருந்து பல தகவல்களும் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் கருப்பு பணம் குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சில தகவல்களை வெளியிட்டார். பட்ஜெட் உரையின் போது இது குறித்து அவர் கூறியதாவது,

கருப்பு பணத்தை மீட்க கடந்த 9 மாத காலமாக மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும். அதே போல் வெளிநாடுகளில் தாங்கள் வாங்கிய சொத்தை மறைப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும்.

பதுக்கலுக்கு உதவும் வங்கிகள், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். தங்கள் வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிப்போர் மீது பண மோசடி சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக வாங்கிய சொத்துக்களின் மதிப்பிலான சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம் செய்யப்படும். பினாமி பெயரில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள்.

இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்குவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். கார்பரேட் வரி 30ல் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து