முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020ம் ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பாஜக அரசின் முதல் முழுமையான இந்த பட்ஜெட்டில் 2020ம் ஆண்டிற்குள் 6 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பண வீக்கம் குறைந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளை விட தற்போது பொருளாதார சூழல் நல்ல நிலையில் உள்ளது. மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பண வீக்கம் 5 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடெங்கும் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். 2020ம்  ஆண்டுக்குள் இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்படும். அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து