முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகுகளை மீட்க 140 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், படகுகளையும் சிங்கள கடற்படை பிடித்துச் சென்றது.மத்திய – மாநில அரசுகள் தூதரகம் மூலம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் தமிழக மீனவர்களின் 81 படகுகளை மட்டும் விடுவிக்க மறுத்து விட்டது.இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றதும் இந்தியாவுடன் சுமூக உறவு வைத்துக் கொள்வதற்காக 81 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட்டார். 81 படகுகளும் வடக்கு இலங்கையில் 4 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.அந்தந்த பகுதி கோர்ட்டுகள் மூலம் படகுகளை விடுவிக்க முறைப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து படகுகளை கொண்டு வர தமிழக அரசு மீனவர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தது.படகுகள் அனைத்தும் பராமரிக்கப்படாத நிலையில் மாதக் கணக்கில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் பழுதடைந்து உள்ளன. இதனால் 81 படகுகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே முதலில் படகுகள் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக தமிழகத்தில் இருந்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் ஆய்வாளர், மெக்கானிக்குகள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர். அவர்கள் 4 இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளை பார்வையிட்டு அவற்றின் நிலை எப்படி உள்ளது? என்ன பழுது ஏற்பட்டுள்ளது என்பன குறித்து ஆய்வு செய்தனர்.

அவர்களில் ஒரு குழுவினர் தொடர்ந்து இலங்கையில் தங்கியுள்ளனர். மற்றொரு குழுவினர் சென்னை திரும்பி 81 படகுகளின் நிலை குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.அதன் பேரில் படகுகளை பழுது பார்த்து மீட்டு கொண்டு வர 140 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் படகுகளின் உரிமையாளர்கள், படகுகளை ஓட்டிக் கொண்டு வரும் பணியாளர்கள், மின்சார கோளாறை சரி செய்யும் எலக்ட்ரீஷியன்கள், மர வேலை செய்யும் தச்சு பணியாளர்கள், மோட்டார் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்திய கடலோர காவல் படை கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
அதன் பிறகு அவர்களை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கும் இலங்கை அதிகாரிகள் அழைத்துச் செல்கிறார்கள். படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கிய பின்பு அவற்றை தமிழகத்துக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வார்கள். சிறிய அளவிலான பழுது ஏற்பட்டுள்ள படகுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு கொண்டு வரப்படும்.
பெரிய அளவில் பழுது ஏற்பட்டுள்ள படகுகளுக்கு தேவைப்படும் உதிரிபாகங்களை தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்கிறார்கள்.

அதன் பிறகு அடுத்த 10 நாட்களில் மீதம் உள்ள படகுகளையும் பழுது நீக்கி மீட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக குழுவினர் 140 பேர் இலங்கை செல்வது குறித்து இந்திய கடலோர காவல் படை, இலங்கை கடற்படையிடம் தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.2 கட்டங்களாக படகுகளை மீட்டு வருவதற்கான தீவிர ஏற்பாடுகளை தமிழக அரசும், மீன் வளத்துறையும் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து