முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., பொதுச் செயலாளராக பிரியங்காவை நியமிக்க திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்காவை நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி அக்கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

ஆனால் அவர் சந்தித்த தேர்தல்களில் எல்லாம் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் அவரது பிரச்சாரம் எடுபடவில்லை. இதனால் வேதனையடைந்த ராகுல் காந்தி விடுப்பு எடுத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டார். அவர் எங்கே என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் புதுப்பொலிவுடன் அவர் திரும்பி வருவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கட்சியில் சில மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சோனியாவின் மகள் பிரியங்கா நியமிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்காவை நியமிக்கும்படி ராகுல் காந்தியே கூறியதாகவும் வேறு சில தகவல்கள் கூறுகின்றன. உருவத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போலவே இருப்பவர் பிரியங்கா.

அவர் அரசியலுக்கு வந்தால் ஒரு கலக்கு கலக்குவார் என்று அவரது கட்சியினர் சிலரே கூறுகிறார்கள். இந்த நிலையில் அவரை காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனேகமாக அது பற்றி இன்று கூட தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous March 1, 23:18

    நியமிக்கப் படட்டுமே !அறிவிப்புக்கு முன்பே
    ஏனிந்த செய்திச் சிதறல் ?

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து