எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் என்பது வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு முறை விலையைக் குறைத்தால், அதற்காக நாம் மகிழ்ச்சி அடைவதற்குள்ளாக; விலையை அதிகமாக்கிய அறிவிப்புகள் மூன்று முறை வருகின்றன.உதாரணமாக கடந்த 16–ந்தேதி அன்று தான் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டது. 14 நாட்கள் தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் இன்றையதினம் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 18 பைசா அளவுக்கும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 9 பைசா அளவுக்கும் உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது.
இதற்குக் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பவும், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புக்கு ஏற்பவும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன என்று கூறப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அதன் முழுப்பலனையும் நுகர்வோருக்கு வழங்கிட முன்வராத அரசாங்கம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போது மட்டும், அதனை அப்படியே நுகர்வோரின் தலையிலே சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.
மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதத்தோடு எடுத்துச் சொன்ன நேரத்தில், தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பையும் ஒரு காரணமாகச் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்களிலிலிருந்து பெட்ரோல் விலை பத்து முறையும், அக்டோபர் மாதத்திலிருந்து டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 3–ந்தேதி விலை குறைக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி 16–ந்தேதி ஒரு முறையும், தற்போது நேற்றையதினம் 28–2–2015 அன்று ஒரு முறையுமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்து விட்ட காரணத்தால், தற்போது அந்த எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படியும், விலை உயர்வு சாதாரண, சாமான்ய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமலும் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.
எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு முடிவினை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் காண்பதற்கு; பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 55 டாலராக இருந்தது. தற்போது 61 டாலராக உயர்ந்துவிட்டது என்கிற காரணத்தைக் காட்டி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ..3.18 ஆகவும், டீசல் விலையை ரூ.3.09 ஆகவும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.மத்திய, நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றம் அடைந்த மக்களின மீது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல பெட்ரோல் டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்தியிருக்கிறது.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்தது.
தற்போது 61 டாலராகத்தான் உள்ளது. அப்போதிருந்த விலையை விட 60சதவீதம் விலை குறைந்திருப்பதால், இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40, டீசல் விலை 30 என விற்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் இப்போது பெட்ரோல் விலை ரூ.63.31 ஆகவும் டீசல் விலை ரூ.52.90 ஆகவும் உயர்த்தியிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பயனை கலால் வரி, விற்பனை வரி என விதித்து மத்திய அரசு வருமானத்தை பெருக்கிக் கொண்டு வருகிறது.மக்களின் மீது இருக்கின்ற சுமையை குறைப்பதற்கு கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சி அதிக அளவில் மானியங்களை கொடுத்து வந்தது.
ஆனால் மத்திய பா.ஜ. க. அரசோ மானியங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு மக்களின் மீது சுமையை ஏற்றுவதற்கு கடும் முயற்சி செய்கிறது.இந்த நடவடிக்கைகள் மூலமாக மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிற மோசமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சரத்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த சிலமணி நேரங்களுக்குள் பெட்ரோல், டீசல் விலைகளை 3ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.பட்ஜெட் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்து விட்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம் என்கிற நம்பிக்கையும் தெரிவித்து விட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகவும், அதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க காரணமாகவும் உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு எந்த வகையில் நியாயம் என்று புரிய வில்லை.தற்சமயம் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதற்கு எந்த ஒரு தேவையும் உருவாகவில்லை. கச்சாஎண்ணெய் விலை பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் பெரும்சரிவு இல்லை. அப்படி இருக்கையில் பெட்ரோல், டீசல்விலை 3 ரூபாய்க்கு மேல் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது குறைத்து அறிவித்தது, சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டுத்தானோ என்கிற ஐயம் இப்போது எழுகிறது. குறைக்கும் போது, 0.50பைசா, ஒரு ரூபாய் என்று குறைத்துவிட்டு, உயர்த்தும் போது ஒரேயடியாக உயர்த்தியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமமாகும்.
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கடுமையாக் கண்டிப்பதோடு அதிகரிக்கப்பட்ட விலைகளை திரும்பப்பெற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.