முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச நாத்திக எழுத்தாளர் படுகொலை

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

டாக்கா - வங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாத்திக எழுத்தாளர் அவிஜித் ராயின் படு கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து டாக்காவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாத்திக எழுத்தாளரான ராய், தனது மனைவியுடன் புத்தகக் கண்காட்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாதவர்கள் அவரைத் தாக்கி, வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் படுகாயம் அடைந்த ராய் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ரபீதியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராய் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி அவருடைய கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தாக்குதலுக்குக் காரணமானோர் கைது செய்யப்படும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று வங்கதேச வலைப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் அவிஜித் ராய் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து