எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை- போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மீது திமுகவினர் திடீரென கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சு வார்த்தை நடத்த நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத்தை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அதிகாரிகளின் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நேற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ,. தலைவர் தாடி.ம.ராசு, திமுக தொழிற்சங்கம் சார்பில் சண்முகம் மற்றும் நடராஜன், சி.ஐ.டி.யூ சார்பில் செளந்தரராஜன் எம்.எல்.ஏ , ஐ.என்.டி.யூ.சி விஷ்ணு பிரசாத், உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்களை சேர்ந்த தலா இருவர் பங்கேற்றனர். நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து செயலாளர் பிரபாகர் ராவ், மற்றும் போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் பங்கேற்றனர். நேற்று பகல் 12-30 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை மாலை 4-30 மணி வரை நீடித்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினர். இதைத்தொடர்ந்து வரும் மார்ச் 12 ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திடீரென திமுகவினர் அதிமுகவினர் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் அதிமுகவை சேர்ந்த எண்ணூர் அர்ஜூனன், நெல்லை பரமசிவம், சண்முகம் , சந்திரமோகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் எண்ணூர் அர்ஜூனின் நான்கு பற்கள் உடைக்கப்பட்டது. இரண்டு கார்கள் உடைக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமியை விரட்டி சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதிமுக தொண்டர்கள் திமுகவினரை தடுத்து நிறுத்தியதால் சின்னசாமி தப்பினார். படுகாயமடைந்த தொண்டர்கள் சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதல் பற்றி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான சின்னசாமி கூறியதாவது:
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. பகல் 12-30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 4-30 மணி வரை நடைபெற்றது. தொழிற்சங்கத்தலைவர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதை விரிவாக அதிகாரிகள் கேட்டு 80 சதவீதம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து நாங்கள் வெளியே வந்த போது திமுகவினர் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அதிமுக தொண்டர்கள் பக்கபலமாக இல்லாவிட்டால் என்னை கொன்றிருப்பார்கள். தொண்டர்கள் உதவியால் உயிரோடு தப்பினேன்.
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. தொழிலாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் அதன் முழு பேரும் புகழும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு போய்ச்சேர்ந்து விடுமே என்ற அரசியல் ஆதாயத்தோடு திமுகவினர் குண்டர்களை அழைத்து வந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் எல்லா தொழிற்சங்கங்களும் அதிகாரிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியோடு வெளிவந்த நிலையில் இந்த , கொலைவெறி தாக்குதலை ஏன் நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறக்கூடாது என்ற திமுகவினரின் எண்ணம் இந்த தாக்குதல் மூலம் வெளிப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்ற சூழ்நிலையில் திமுகவினர் நடத்திய கொலை வெறி தாக்குதல் , தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலையடுத்து , போலீசார் திமுகவினரை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.