முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் 5 நாள் தெப்ப உற்சவம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தெப்ப உர்சவம் தொடங்கியது.

நேற்று முன் தினம் மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமி தெப்பத்தை வலம் வந்தார். இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

தெப்ப உற்சவ முதல் 3 நாட்கள் வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 4-ம் தேதி இரவு உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி பூதேவி, பூதேவி தாயார்களுடன் தெப்பத்தில் 5 சுற்றுகளும், 5வது நாளான 5-ம் தேதி 7 சுற்றுகளாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து