முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தாவால் ஆபத்து: கோர்ட்டில் ஆதீனம் மனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - நித்யானந்தாவால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்  மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனமமாக நியமித்ததை ரத்து செய்யுமாறு சென்னையைச் சேர்ந்த மணிவாசகம், கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அம்மனு மீதான விசாரணை நடந்தபோது நித்யானந்தா மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இழ்ழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து வழக்கை விசாரிக்குமாறு நித்யானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஆதீனத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி மதுரை ஆதீனம் ஒரு மனு வைத்தாக்கல் செய்தார். அதன் விவரம்: மதுரை ஆதீன மடத்தின் பக்தராக இருக்கவே நித்யானந்தா விரும்பினார். மேலும் பிடதி ஆசிரம தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி விடுவதாகவும் கூறினார். இதனால் அவரை அனுமதித்தேன். மடத்தில் அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கவில்லை. ஆசிரமத்தில் தம்பிரானாக இருப்பவர் தான் இளைய ஆதீனமாக வரத்தகுதியுடையவர்.

நித்யானந்தாவை  தம்பிரானாக நியமிக்கும் எண்ணம் இருந்தது. இதனால் அவர் எனது கண்காணிப்பில் இருந்தார். ஆனால் ஆதீன கொள்கைகளுக்கு அவரால் மாறமுடியவில்லை. மாறாக ஆதீன மடத்தை நாசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகள் இயற்கைக்கு மாறாக இருந்தன. எனக்கு சமமாக உட்கார்ந்தார். தன்னை கடவுள் எனக் கூறினார். 293-வது ஆதீனம் என்று அறிவித்தார்.

அவர் மீதான பாலியல் வழக்குகள் பற்றி எனக்குத் தெரியவந்தது. இதனால் 2012-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியேற்றப்பட்டார். நித்யானந்தாவை முறைப்படி எந்த பொறுப்பிலும் நியமிக்கவில்லை. இதனால் அவரது நியமனத்தை ரத்து செய்யும் கேள்வி எழவில்லை. ஆதீன அறக்கட்டளை நிறுவ எனது கொயெழுத்தை போலியாக பெற்றார். இது போன்று மோசடியாக பல ஆவணங்களை நித்யானந்தா தயார் செய்து ஆதீனத்தை அழிக்க முயன்றார்.

வெளியேறிய பிறகும் ஆதீனத்தை அழிக்க முயற்சித்து வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரைத் தண்டிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கான விசாரணையை நீதிபதி ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து