எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் சார்பில் தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
அம்மா அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் சார்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும், இந்த முகாமில் எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், கணினி பணியாளர், கட்டுமானத் தொழில், ஓட்டுநர், மெக்கானிக், பின்னலாடை ஆகிய தொழிலில் பயிற்சி பெற்ற 67,000 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கவும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 20.2.2015 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதுவாழ்வுத் திட்டம் அம்மா அவர்களால் 2005ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, இத்திட்டத்தின் மூலம், இதுவரை 3,18,469 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 2,63,811 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, 42,116 இளைஞர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளன.
மேற்கூறிய 20.2.2015 அன்று ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அம்மா அவர்களின் 67வது பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழகத்தின் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களில் 2,72,518 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் தகுதி வாய்ந்த 83,651 நபர்கள் வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில், செல்பேசி பழுதுபார்த்தல் நிறுவனங்களுக்கு 187 நபர்களும், கணினி நிறுவனங்களுக்கு 9955 நபர்களும், கட்டுமான நிறுவனங்களுக்கு 5998 நபர்களும், பின்னலாடை நிறுவனங்களுக்கு 17,179 நபர்களும், சிறு தொழிற்சாலைகளுக்கு 8118 நபர்களும், தனியார் வாகன ஓட்டுநர் பணிகளுக்கு 20,977 நபர்களும், மருத்துவ நிறுவனங்களுக்கு 941 நபர்களும், அழகுக் கலை நிறுவனங்களுக்கு 685 நபர்களும், கோழிவளர்ப்பு நிறுவனங்களுக்கு 253 நபர்களும், கேட்டரிங் நிறுவனங்களுக்கு 1806 நபர்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 6638 நபர்களும், சேவை நிறுவனங்களுக்கு 6638 நபர்களும், பொது தனியார் நிறுவனங்களுக்கு 4242 நபர்களும் ஆக மொத்தம் 83,651 நபர்கள் வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் 24.2.2015 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் அமைச்சர்கள் பங்கேற்று இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற, பணி நியமன ஆணைகளை, கடந்த 2.3.2015 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள தேவர் உறாலில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் வழங்கினார்.வேலைவாய்ப்பு பெற்ற அனைவரும் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா ஆர்.மனோகரன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் .ஜெயா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி இயக்குநர் கா.பாஸ்கரன்,., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் வி.அமுதவள்ளி,நகராட்சி நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ்,., பேரூராட்சிகள் இயக்குநர் ராஜேந்திர ரத்னு,., மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிச்சாமி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.