முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஆம் ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும் அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர்.

இதனால் நேற்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ராஜினாமாவை கட்சியின் செயற்குழு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து கெஜ்ரிவால் கூறும் போது, டெல்லி முதல்வராக பணியாற்றி வருவதால் தன்னால் கட்சி பணியும் வகிக்க முடியவில்லை. இதனால் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகி உள்ளேன். டெல்லியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து