முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலாத்கார குற்றவாளியின் பேட்டி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று திகார் சிறையில் உள்ள முகேஷ்சிங் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. சிறைக்குள் சென்று பேட்டி அளிக்க அனுமதி அளித்தது எப்படி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து ராஜ்யசபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து