முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. இத்தேர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்காக தேர்வுக்கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. வரும் 19ந்தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தெரிவித்து / தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தொடர்பு எண்கள் வருமாறு:
1. 8012594101 2. 801259411 3. 8012594120 , 4. 8012594125

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து