முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலை துண்டிக்கும் நைஜீரிய தீவிரவாதிகள்: வீடியோ வெளியீடு

புதன்கிழமை, 4 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

அபுஜா - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளின் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர். அது போன்ற கலாச்சாரத்தை மற்ற தீவிரவாத அமைப்புகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவிக்கும் அவர்கள் தற்போது அண்டை நாடுகளான நைஜர், கேமரூன் உள்ளிட்ட நாடுகளிலும் அத்துமீறல் நடத்தி வருகின்றனர். தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்று தாங்கள் சிறை பிடித்து வைத்திருக்கும் பிணை கைதிகளின் தலையை கத்தியால் துண்டித்து கொலை செய்கின்றனர். சமீபத்தில் இது போன்று 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
 
அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோவில் 2 ஆண்கள் முழங்காலிட்டபடி அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளது. அவர்களின் பின்புறம் ஒரு தீவிரவாதி கத்தியுடன் நிற்கிறான். மற்றொருவன் அவர்களது குற்றச்சாட்டை வாசிக்கிறான். இவர்கள் தீவிரவாதிகளை உளவு பார்த்ததாகவும், அதனால் தலை துண்டித்து கொல்லப்படுவதாகவும் கூறுகிறான். அதை தொடர்ந்து அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு உடல்கள் மட்டும் கிடப்பது போன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து