முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

ஜகார்தா - இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமித்ரா தீவின் மென்டாவாய் தீவுகளை ஒட்டி மேற்கு கடற்கரை பகுதியில் கடலுக்குள் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் மேற்கு சுமத்ரா மாகாண தலைநகர் படாங் உள்ளிட்ட பல நகரங்கள் அதிர்ந்தன.

அதை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவின் ஏக் மாகாணத்தில் கடலுக்கு அடியில் பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டது. அதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதே போன்று இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளிலும் சுனாமிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து