முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாமன்ற 38-வது உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சென்னை மாநகராட்சி 38-வது உறுப்பினர் எஸ்.சந்தானம், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா  அறிவித்துள்ளார். இது  குறித்து   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

மேலும்,  38-வது வட்டத்தின் செயலாளர் பி.வெங்கடசேனும் கட்சிப் பொறுப்புகள் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,

கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் இரண்டு பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்தில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.சந்தானம், மாநகராட்சி 38-வது உறுப்பினராகவும், மாநகராட்சி வரிவிதிப்பு, நிதிநிலைக் குழுத் தலைவராகவும் உள்ளார்.

மற்றொருவரான பி.வெங்டேசன், அதிமுக 38-வது வட்டச் செயலாளராக இருக்கிறார். இருவருடனும் கட்சியினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இவ்வாறு மக்களின்  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து