முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக ருத்ரயாகம்: அமைச்சர் பங்கேற்பு

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக சென்னை அகத்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் வளர்மதி ருத்ர யாகம் நடத்தினார்.

அதிமுக இலக்கிய அணி சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன் வாழவும் மீண்டும் முதல்வராகவும் வேண்டி சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் ருத்ர யாகம் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக இலக்கிய அணி செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி பங்கேற்று, குண்டத்துடன் கோவிலை வலம் வந்தார்.பயபக்தியோடு சாமி கும்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக செயலாளர் நுங்கை மாறன், கவுன்சிலர்கள் சிவராஜ், கற்பகம், சாந்தி பாஸ்கர், பாபு, புஷ்பா நகர் ஆறுமுகம் ஆயிரம் விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜூன், சாலை முத்து வட்டசெயலாளர்கள் பார்த்தசாரதி மற்றும் கிருபாகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானங்களையும் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து