முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி அறிவிப்பு: வீடு - வாகன கடன் வட்டி குறைகிறது

புதன்கிழமை, 4 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலியால், வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, மற்ர வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக வங்கிகல் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் விட்டுக் கடன், வாகனக் கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் தனி நபர் கடன் மீதான வட்டி விகிதம் குறையவும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

பொருளாதாரம் 8.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடையும் என பொருளாததார ஆய்வறிக்கை நம்பிக்கை தெரிவித்தது. இதையடுத்து, வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பண வீக்கம் குறைந்துள்ளதால் மின்சாரம், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு துறைகளில் புதிய நடைமுறையை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனவும், மாதாந்திர கடன் தவணை குறையும் எனவும் மத்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. ஒன்றரை மாதத்துக்குள் மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி வட்டிகடன் கொள்கையை அறிவிக்கும். தற்போதைய அறிவிப்பு வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைத்ததிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மும்பை பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 30,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

தேசிய பங்கு சந்தை 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்துள்ளது. வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்பால் ஆட்டோ இன்டஸ்ட்ரி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் கணிசமாக உயர்ந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து