முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை புறநகர் - குமரி மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்ட அதிமுக அமைப்புத் தேர்தலுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து மக்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநில அதிமுக அமைப்புத் தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தியும் மதுரை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட செந்தூர் பாண்டியன் ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்புத்தேர்தல் நடத்துவதற்காக மதுரை புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக இலக்கிய அணி செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதியும் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நாமக்கல் மாவட்ட செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான பி.தங்கமணி நியமிக்கப்படுகின்றனர். இவ்ர்களுக்கு அதிமுக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து