முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை மிரட்டல்: ஹசாரேவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

தானே - பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவர் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அன்னா ஹசாரேவுக்கு கனடாவை சேர்ந்த ககன்விது, நீலு என்ற 2 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர். ஹசாரேவின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவர்கள் இந்த மிரட்டலை வெளியிட்டனர். அதில் அவர்கள் அன்னா ஹசாரேவை கொலை செய்யும் நேரம் வந்து விட்டது. நாதுராம் கோட்சே போல நாங்கள் மாறப்போகிறோம் என்று கூறி இருந்தனர். மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த அசோக் கவுதம் என்பவரின் பேஸ்புக்கிலும் இந்த கொலை மிரட்டல் பதிவாகி இருந்தது.

இந்த கொலை மிரட்டல் பற்றி அசோக் கவுதம் மும்பை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ககன்விது, நீலு ஆகிய இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹசாரே விழாவில் மராட்டியத்தில் இருந்து டெல்லி வரை யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஹசாரேவுக்கு பாதுகாப்பை அதிகரிக்க மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் ஹசாரே பாதுகாப்புக்கு நேற்று முதல் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து