முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் இந்தியா திரும்புவது எப்போது? கமல்நாத் பேட்டி

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை.

ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக அவர் தன்னை தயார்படுத்தி கொள்ளவே வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே காங்கிரஸ் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை ராகுல் செய்ய கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்புவார் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதை காங்கிரஸ் மறுத்தது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறுகையில், ராகுல் காந்தி இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து